நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME!... PART 11...கண்ணனை நினை மனமே!..பகுதி 11..(அஷ்டாங்க யோகம்.. தொடர்ச்சி).

பட்டத்திரி, தொடர்ந்து சொல்கிறார்!..

"இவ்விதம் உன் அவயவங்களைத் தியானிப்பவர்களுக்கு, உன் பரப்பிரம்ம ஸ்வரூபம், தானே மனதுள் பிரகாசிக்கிறது. அந்த சமாதி நிலையை அடைந்த பின்னர், அதிலிருந்து நழுவ நேர்ந்தால், மறுபடியும் தாரணை முதலியவற்றை நாங்கள் தொடங்குவோம்!.. இந்த தொடர் அப்பியாசத்தால், சுகர், நாரதர் போல், பக்தர்களில் தலைசிறந்தவராவோம்!..".

திங்கள், 15 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME!...PART 10...கண்ணனை நினை மனமே!!!...பகுதி 10...அஷ்டாங்க யோகம்!...


இதுவரை, தம் உள்ளத்தில் நிலையான பக்தியை அருளுமாறு வேண்டிய பட்டத்திரி, யோக மார்க்கத்தின் மூலம், பகவானை அடையும் விதம் பற்றி, இந்த தசகத்தில்  சொல்கிறார்!..

KANNANAI NINAI MANAME..PART 9....கண்ணனை நினை மனமே!.. பகுதி 9..​

நாம் முன்பே பார்த்தது போல்,  பட்டத்திரிக்கு ஏற்பட்ட நோய், அவரது விருப்பத்தாலேயே ஏற்பட்டது...எனினும் அதைத் தீர்க்கும் வழி அறியாதவராக, குருவாயூரப்பனிடம் சரண் புகுந்தார்.. தமது நோயின் காரணமாக, பரம பக்தனின் இலக்கணங்களாகச் சொல்லப்படும் குணங்கள் எதையும் தம்மால் கடைபிடிக்க இயலவில்லை என்று மனவருத்தம் மிகக் கொண்ட அவர், தம்மை பக்தி வழியில் செலுத்துமாறும், அதற்காக, தமக்கு உடல் நலத்தை அருளுமாறும் வேண்டுகிறார் ஸ்ரீஅப்பனிடம்!..

KANNANAI NINAI MANAME...PART 8....கண்ணனை நினை மனமே!..‍பகுதி 8....

பக்தர்கள், பகவானிடத்திலே எப்போதும் ஈடுபட்ட மனதுடையவர்களாக, அவரது லீலைகளைப் பற்றியே சிந்தித்து,  தன்னையொத்த மனப்பாங்குடையவர்களிடம் சத்சங்கம் செய்து கொண்டு சஞ்சரிப்பதையே இயல்பாகக் கொண்டவர்கள்..அவ்விதம் இருக்கும் போது, உலகத்தின் மாயா வேகம் அவர்களைத் தாக்காது.. ஸ்திரமான மனதுடையவர்களாய், உலகியல்களால் பாதிக்கப்படாது, தாமரை இலைத் தண்ணீர் போல், பற்றற்று உலகியலை நடத்துவார்கள்.. பகவானின் நாம ஸ்மரணை அவர்களது இயல்பில் ஒன்றியதாயிருக்கும்..

KANNANAI NINAI MANAME..PART 7.....கண்ணனை நினை மனமே!..பகுதி 7...பக்தன் எவ்வாறு இருக்க வேண்டும்?!..


இந்த தசகத்தில்,  பக்தனின் இலக்கணம், அவன் எவ்வாறிருக்க வேண்டும் என்று பட்டத்திரி கூறுவதைப் பார்க்கலாமா?..

திங்கள், 1 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME.. PART 6....கண்ணனை நினை மனமே!!.. பகுதி 6.. பகவத் ரூப வர்ணனை!..(தொடர்ச்சி..).

குதூகலத்தை அளிக்கும் பரந்தாமனின் திவ்ய ரூபம், பட்டத்திரியை முழுமையாக ஆட்கொண்டதில் வியப்பென்ன?!... இப்போது, பரிபூரணனின் திருவுருவம், பட்டத்திரியின் மனத்திரையில் முழுமையாக உருக்கொண்டு விட்டது. கேசாதிபாதமாக வர்ணித்தவருக்கு, சட்டென்று பொறி தட்டியது!.. ஆ!!.. பிராட்டியின் சிறப்பைச் சொல்ல வேண்டாமோ?!. பெருமானின் கருணை வடிவே  பிராட்டியாய் அவன் திருமார்பில் கொலுவிருக்க, ஸ்ரீ யை சேர்த்தல்லவோ ஸ்ரீநிவாசனை தியானிக்க வேண்டும்?!..

KANNANAI NINAI MANAME..PART 5...கண்ணனை நினை மனமே!!.. பகுதி 5.. பகவத் ரூப வர்ணனை!..


ஸ்ரீமந்நாராயணீயமே பக்திப் பிரவாகம். .நிலையான க்ருஷ்ண பக்தியையே, தியான ஸ்லோகத்தில் பட்டத்திரி பிரார்த்திக்கிறார். பக்தன் , பகவானை, நினைந்து நினைந்துருகி தியானிப்பதிலேயே பேரின்பம் காண்பவன்.. அது போல், அவரது மகிமைகளைப் போற்றுந்தோறும் எல்லையில்லா இன்பம் காண்கிறான். அதற்கு எல்லையிட அவனால் ஆகாது!..

KANNANAI NINAI MANAME!!.. PART 4...கண்ணனை நினை மனமே!.. பகுதி; 4..


குருவாயூரப்பனின் திருமேனியழகை தொடர்ந்து தியானிக்கிறார் பட்டத்திரி!


"நீர் கொண்ட மேகம் போல் கறுத்தும் அழகாகவும்காயாம்பூவைப் போல் மனதிற்கு இனிமையானதாகவும்எல்லையற்ற அழகுடையதாகவும்லக்ஷ்மீ தேவியின் லீலா நிலயமாகவும்தியானிப்பவர்களின் மனதில் அமுதத்தை பெருக்குவதாகவும் உள்ள உமது திருமேனியை இடையறாது தியானிக்கிறேன்.."

வெள்ளி, 21 நவம்பர், 2014

KANNANAI NINAI MANAME!!!..(PART 3)....கண்ணனை நினை மனமே!!!!..பகுதி 3..பகவத் மகிமை!!!!!!!....


பட்டத்திரி, பகவானை நினைத்துப் பாடத் துவங்கினார்!!.. 

வார்த்தைகள் பிரவாகமாகப் பெருக்கெடுத்தன!..ஆயினும்.....

எங்கு துவங்குவது?!.. எப்படித் துவங்குவது?!!..ஆதி அந்தமில்லா பரம்பொருளை எவ்விதம் போற்றுவது?!... நிறைவு செய்தல் என்பது எப்படி முடியும்?!. முடிவில்லாததற்கு முடிவென்று உண்டா?!..கண்களில் நீர் பெருகியது!... 

KANNANAI NINAI MANAME!! (PART 2 )....கண்ணனை நினை மனமே!...பகுதி :2


ஸ்ரீமந்நாராயணீயம் பாடியருளிய நாராயண பட்டத்திரியின் வாத நோய், அவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது!..அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி, வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்திய போது, பட்டத்திரி அவருக்கு உளப்பூர்வமாக சேவை புரிந்தார். ஆயினும் தன் குருவின் நோய் கண்டு வருந்திய அவர்,  அதை, யோக பலத்தால், தாமே  ஏற்றுக் கொண்டார்!!....

KANNANAI NINAI MANAME!! PART 1......'கண்ணனை நினை மனமே!' (ஸ்ரீமந்நாராயணீயம்) பகுதி : 1.


அன்பர்களுக்கு வணக்கம்!..

கொஞ்ச காலமாக, ஸ்ரீமந்நாராயணீயம் வகுப்புகளுக்கு சென்று வருகிறேன்.. நிறையும் தருவாயிலிருக்கிறது..

மின் தமிழ் குழுமத்தில், அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீமந்நாராயணீய சாரம் எழுத இறையருள் கூட்டுவித்திருக்கிறது..

அங்கு தருவதை, சற்று, சுருக்கியோ, விரித்தோ, இங்கும் தர வேண்டுமென தோன்றியதைச் செயலாக்கியிருக்கிறேன்!..

அன்பர்கள் படித்து, தவறிருப்பின் சுட்ட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!..

புதன், 5 நவம்பர், 2014

VAIKUNTHA CHATHURDASI, VISWESVARA VIRATHAM (5/11/2014).....வைகுந்த சதுர்த்தசி, விஸ்வேஸ்வர விரதம். (5/11/2014)


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இன்றைய தினம் (5/11/2014) 'முகுந்த சதுர்த்தசி'. இது 'விஸ்வேஸ்வர விரதம்' எனவும் அழைக்கப்படுகின்றது.. சிவன், திருமால் இருவரையும் ஒரு சேர பூஜித்துப் பயன் பெற உகந்த தினம் இது!!!!!..  

விரத தினம்:

ஞாயிறு, 2 நவம்பர், 2014

KAMSA VADHAM.!!! (2/11/2014) ......கம்ச வதம்!!!!!...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ தசமி, ஸ்ரீக்ருஷ்ணர், கம்சனை வதம் செய்த திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

DIWALI GREETINGS!.....தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!....


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்!.

இந்த வருட தீபாவளி தினத்தில், நம் அனைவர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைய‌, இறைவனை பிரார்த்திக்கிறேன்!... 

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

தீபாவளி குறித்த முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்கவும்...

சனி, 11 அக்டோபர், 2014

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 2....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி..

விரதக் கதை:

பல்வேறு விரதக் கதைகள் கர்வா சௌத் குறித்துச் சொல்லப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 1.....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 1.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!...

விரதப் பதிவுகள் போட்டு கொஞ்சம் நாளானதால், இன்னிக்கு ஒரு விரதப் பதிவு!.. நாம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்கள், அவற்றின் வழிமுறைகள், கதைகள் எனப் பார்த்து வருகிறோம் இல்லையா.. அந்த வரிசையில், இன்று கொண்டாடப்படும் ஒரு விரதம் பற்றி பார்க்கலாம்.. வழக்கமாக இந்தி திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பவர்களுக்கு இந்த விரதம் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்..  பெண்கள், மாலை வேளையில் சந்திரனை, மாவு சலிக்கும் சல்லடையால் நோக்கி வணங்கும் காட்சி பெரும்பாலனவற்றில் இடம் பெற்றிருக்கும். அந்த விரதம் தான் நாம் இன்று காணப் போவது..' காரக சதுர்த்தி விரதம்' என்றும் சொல்லப்படும் இது 'கர்வா சௌத்' என்று வடமாநிலங்களில் பிரபலமாக வழங்கப்படுகின்றது..

திங்கள், 6 அக்டோபர், 2014

SONG # 8...THAYUMANAVADIGAL ARULIYA ..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 8.... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


பாடல் # 8.

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

வெள்ளி, 3 அக்டோபர், 2014

SONG # 7...THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 7...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 7.
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
  விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

புதன், 1 அக்டோபர், 2014

SONG # 6.....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 6, தாயுமானவடிகள் அருளிய, 'மலைவளர் காதலி'..


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 6,
பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

SONG # 5....THAYUMANAVADIGAL ARULIYA..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 5... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 5..
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

திங்கள், 29 செப்டம்பர், 2014

SONG # 4....THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAI VALAR KAATHALI'......பாடல் # 4.. தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 4.. 
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

முதலில் சில சொற்களுக்கான பொருளை மட்டும் பார்க்கலாம்..மிடி - வறுமை. கலம் - மட்பாண்டம். வாசம் - உறைவிடம்.   துடி - நடுக்கம்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

SONG # 3....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 3... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'..


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!
பாடல் # 3..
பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
    பொய்யென் றெனைக்காட்டிஎன்
  போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
    போகபூ ரணவெளிக்குள்
ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
    எல்லாஞ்செய் வல்லசித்தாம்
  இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
    எளியேன் மறந்துய்வனோ
வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே.
பொருள்:

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே....."நான்மறைகள் மற்றும், திருமுறைகளாகிய ஆகமங்களின் தன்மையை,  விளக்கும் உள்முகக் கண் அதாவது அறிவுக் கண் இல்லாதவர்க்கும், உன் புகழைக் கேட்கும் பேறில்லாத‌ செவிடர்க்கும்,  வீண் வாதம் செய்வதில் மிக்க விருப்புடைய‌வர்க்கும் கிட்டாத, மூன்று திருவிழிகளை உடைய, மாமருந்தாகிய அமிர்தத்துக்கும் அமிர்தம் போன்றவளே!.."

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

SONG # 2.. THAYUMANNAVDIGAI ARULIYA MALAIVALAR KAATHALLI.....பாடல் # 2.. தாயுமானவடிகள் அருளிய மலைவளர் காதலி.


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!...
பாடல் # 2..
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
      சிற்றிடையி லேநடையிலே
   சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
      சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
      பொடியிலே அடியிலேமேல்
   பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
      புந்திதனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
      நின்னடியர் கூட்டத்திலே
   நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
      ஞேயத்தி லேயுன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
      வளமருவு தேவை அரசே
   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
      வளர்காத லிப்பெண்உமையே.

வியாழன், 25 செப்டம்பர், 2014

THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KATHALI'...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி!'.


அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்!.

அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!.. நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அம்பிகையின் அருளாட்சி நிறைய வேண்டுகிறேன்!..

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

JIVIT PUTRIKA VRAT....ஜீவித்புத்ரிகா விரதம் (16/9/2014)

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

நம் பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விரதங்களையும் அவற்றுக்கான சம்பிரதாயங்களையும் சில பதிவுகளில் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம்..அந்த வரிசையில் இன்று 'ஜீவித் புத்ரிகா' விரதம் குறித்துப் பார்க்கலாம்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA CHARANAM....ஸ்ரீ கணேச சரணம்!..


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நாளை 29/8/2014 விநாயக சதுர்த்தி..ஸ்ரீவிநாயகரைப் பற்றியும், விநாயக சதுர்த்தி பூஜை பற்றியும் இங்கு பதிவிட்டிருக்கும் முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்குங்கள்.




இங்கு கர்நாடகாவில் இதுவே பெரிய பண்டிகை.. தீபாவளி கூட சிறப்பாகக் கொண்டாடமாட்டார்கள்..

சனி, 16 ஆகஸ்ட், 2014

SRI KRISHNA VAIBHAVAM..ஸ்ரீ கிருஷ்ண வைபவம்.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

இன்று (17/8/2014)  கோகுலாஷ்டமி திருநாள்..கோகுலாஷ்டமி குறித்தும், அதைக் கொண்டாடும் விதம் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

சின்னக் கண்ணன் லீலைகள் சொல்லச் சொல்ல இன்பமல்லவா!.. 

பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்?. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக அவதரித்தது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

PERUKI VARUM KAAVIRI (AADI PERUKKU..3/8/2014) ...... பெருகி வரும் காவிரி (ஆடிப் பெருக்கு, 3/8/2014).

அன்பர்களுக்கு வணக்கம். ஆடி பெருக்கு தினத்தில் காவிரித் தாய் பொங்கிப் பெருகுவதைப் போல் நம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நலமும் வளமும் பொங்கிப் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

 முந்தைய வருடங்களில், ஆடி பெருக்குக்கான சிறப்புப் பதிவில், காவிரி ஆறு தோன்றிய புராணம், ஆடி பெருக்கில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் என்று பார்த்தோம்.   பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

காவிரியை ஒரு 'ஆறு' என்ற அளவில் மட்டும் நம் தமிழ் மக்கள் நினைப்பதில்லை. பழங்காலத்திலிருந்து, ஒரு பெண்ணாய், சோறூட்டும் அன்னையாய், ஒரு பெரிய கலாசாரத்திற்கு வித்தாய், வாழ்வாதாரமாய்

சனி, 26 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 9....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'.. பாடல் # 9.



திருச்சிற்றம்பலம்.

பாடல்;

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!.. தென்னை மரங்கள் பரவியுள்ள திருவுத்தரகோசமங்கையில், தங்குதல் பொருந்திய, சோதி வடிவான, ஒப்பற்ற திருவுருவமுடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியை அறுத்து, எம் போன்றவரையும் ஆட்கொள்ளும் பொருட்டு, திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்திய மங்கையும்(உமாதேவியும்) தானுமாய்த் தோன்றி,

வெள்ளி, 25 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.....SONG # 8. ..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 8.


திருச்சிற்றம்பலம்:

பாடல்:

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலில் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை  வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

இந்தப் பாடலில், 'ஞாலம் மிக' என்பதை முதலாவதாகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. 

'உலகம் உய்யும்படியாக, உயர்ந்த கயிலை மலைச் சிகரத்தினின்று, நிலவுலகில் இறங்கி  வந்து, 'வந்தி' தந்த பிட்டினை, அமுதாக உண்டும், வலைஞனாக, கடலில் கட்டுமரத்தின் மீது ஏறி மீன் பிடித்தும், குதிரைகளின் மீதேறி பரிமேலழகனாக வந்தும் நமையாண்ட இறைவன்,

வியாழன், 24 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 7.



திருச்சிற்றம்பலம்!
பாடல்:

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! ..நினைத்தற்கரிய, திருவுத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் நிலையாக, பொலிவுடன் எழுந்தருளியிருக்கும் பெருமையுள்ள வேதியனும், தன் புகழை பலகாலும் சொல்லி,

புதன், 23 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG..# 6....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்.. பாடல் # 6.

திருச்சிற்றம்பலம்:

பாடல்:

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"தாமரை மொட்டு போன்ற, அணிமணிகளை அணிந்த தனங்களையுடைய பெண்களே!...உமாதேவியாரை, தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டருளியவனும், திருவுத்தரகோசமங்கையில் உள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடாமுடியை உடையவனும்,  நாய்க்கு ஒப்பான எம்மை,

செவ்வாய், 22 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.

திருச்சிற்றம்பலம்!..

பாடல்:

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"அழகிய தனங்களையுடைய பெண்களே!!.. 'இறைவன், ஆணோ, பெண்ணோ, அலியோ..' என்று அறிவதற்காக, அயனும் மாலும் தேடியும் கண்டடைய முடியாத கடவுளாகிய எம்பிரான், தன் தனிப்பெருங்கருணையால், தேவர் கூட்டம் தோற்று அழியாதபடிக்கு

திங்கள், 21 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 4...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 4.


திருச்சிற்றம்பலம்!!!!...

பாடல்:

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாய் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே!....விடம் அமர்ந்த‌ கண்டத்தை உடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற,  உயர்ந்த மாடங்களை உடைய,


ஞாயிறு, 20 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல் பாடல் # 3.

திருச்சிற்றம்பலம்!.

பாடல்:

முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"பொன்னாலான அழகிய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!,..ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், பலநூறு கோடி தேவர்களும், முனிவர் கூட்டமும் அவனது அருளுக்காக காத்திருக்கும் போது, தனது விபூதியை எனக்களித்து, தன் கருணை வெள்ளத்திலே, மிகுதியாக யான் ஆழ்ந்திருக்குமாறு அருளிய மணி (மாணிக்கம்) போன்ற எம்பிரான், எழுந்தருளியிருக்கும் அழகிய உத்தரகோசமங்கையில் உள்ள,  ஒளி பொருந்திய,

வெள்ளி, 18 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 2..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' பாடல் # 2


திருச்சிற்றம்பலம்!

பாடல்:

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

மயில் போன்ற சாயலும், அன்னம் போன்ற நடையழகும் உடைய பெண்களே!....மூன்று விழிகளை உடையவனும்,

வியாழன், 17 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 1..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 1

Image result for lord siva and sakthi in swing
அன்பார்ந்த பெரியோர்களுக்கு பணிவான வணக்கம்!

சில தினங்களுக்கு முன்பாக, சென்னையில், ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது. திருமண நிகழ்வுகளில் 'ஊஞ்சல்' என்பதும் ஒன்று. மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, அதை முன்னும் பின்னும் ஆட்டியவாறு, ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர். அப்போது, திருவாசகத்தில் 'திருப்பொன்னூசல்' பாடுவது வழக்கம்.. இம்முறை அந்தப் பாடல்களைக் கேட்ட போது,  ஆடி மாதப்பிறப்பினை ஒட்டி,, 'திருப்பொன்னூசல்' பாடல்களுக்கு ,தெரிந்த அளவில் பொருளெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எம்மால் ஆவது யாதொன்றும் இல்லை என்பது சர்வ நிச்சயம்.. அரனருளாலேயே இந்த எண்ணம் தோன்றியதென்பதால் அவனருளாலேயே இது நிகழ வேண்டும்.. எம்பெருமான் எம் உள்ளத்தமர்ந்து, இவ்வரிய செயலை நிறைவேற்றித் தர மனமுருகி வேண்டி, இவ்வரிய செயலைத் தொடங்க முற்படுகின்றேன்..

இதைப் படிக்கும் அன்பர்கள், இதில் நான் செய்திருக்கும் தவறுகளைச் சுட்டி, திருத்துமாறு  கோருகிறேன்....கூடுமானவரை, தினம் ஒன்றாக பொருளெழுத இறையருள் கூட்டுவிக்கும் என்று நம்புகிறேன்..

வெள்ளி, 4 ஜூலை, 2014

SUKRAVARA LAKSHMI PUJA/ SHAAKA VIRATHAM...சுக்ரவார லக்ஷ்மி பூஜை/ ஷாக விரதம்!!.....

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

திருமகளின் அருள் நாடி, பற்பல விரதங்களையும் பூஜைகளையும் நாம் செய்கிறோம்!.. பொருட்செல்வம் மட்டுமின்றி, வாழ்வில் நாம் விரும்பும் அனைத்து விதமான நற்பேறுகளையும் ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதிப்பதால் நாம் பெறலாம்.

தூயது அனைத்திலும் தேவியைக் காண்பது நமது மரபு... குத்து விளக்கின்  முத்துச் சுடரில், தூய ஆடைகளில், மணம் வீசும் மலர்களில், சுத்தமான இருப்பிடங்களில் எல்லாம் ஸ்ரீதேவி வாசம் செய்கிறாள்.. நல்லனவற்றையே விரும்பி, பேசி, செய்பவர்கள் உள்ளங்களிலெல்லாம் உறைகிறாள்..

புதன், 25 ஜூன், 2014

SRI PARAINAACHIYAAR AMMAN THIRUKKOIL, PA.KARUNGULAM..ஸ்ரீ பறைநாச்சியார் அம்மன் திருக்கோவில், ப. கருங்குளம்:

அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!

'மின் தமிழ்' குழுமத்தில், 'கிராம தேவதைகள்' இழையில், ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன்(பரநாச்சியம்மன்) குறித்து நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

கோயில் அமைந்திருக்கும் இடம்:
இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.

கோயிலின் முக்கிய அம்சங்கள்:

1. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.
2. மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.

வியாழன், 12 ஜூன், 2014

CHAMPAKA CHATHURDASHI VIRATHAM (12/6/2014) .....சம்பக சதுர்த்தசி விரதம்


அன்பார்ந்த  நண்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம் 'சம்பக சதுர்த்தசி'.. உமையொரு பாகனான சிவபிரானைத் துதிக்கும் விரதங்களுள் ஒன்றான இது வங்காள தேசத்தில் பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகின்றது. வங்காளிகள் மட்டுமின்றி, பெரும்பாலான வட இந்தியர்களும், சிவபிரானைத் துதித்து, இவ்விரதத்தை பக்தி சிரத்தையோடு அனுசரிக்கிறார்கள்.

செவ்வாய், 3 ஜூன், 2014

ARANYA GOWRI VIRATHAM, ARANYA SHASTI, VINTHYAVASINI PUJA.(4/6/2014 ).ஆரண்ய கௌரி விரதம்.ஆரண்ய சஷ்டி, விந்த்யவாஸினி பூஜை


அன்பார்ந்த‌ நண்பர்களுக்கு வணக்கம்!..

கௌரி விரதங்களைப் பற்றி நாம் சில பதிவுகளில் பார்த்து வருகிறோம்..இந்தப் பதிவில், 'ஆரண்ய கௌரி விரதம்/ஆரண்ய சஷ்டி விரதம், பூஜை' ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்..

காடு, மலை, நதி என அனைத்தையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நமது மரபு.

வெள்ளி, 16 மே, 2014

EN MUTHAL MINNOOL..என் முதல் மின்னூல்!!!

அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

இறையருளாலும், பெரியோர்களின் ஆசியாலும், நான் எழுதிய 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‍பிடித்த பத்து‍‍-- பொருளுரை',  மின்னூல் வடிவம் பெற்று விட்டது. அது குறித்த தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன்.. அன்பர்கள் மின்னூலினை தரவிறக்கி, படிக்க வேண்டுமாய், மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

PACHCHAI PATHIGAM...திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 'பச்சைப் பதிகம்' (திருநள்ளாறு தேவாரத் திருப்பதிகம்)

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்தத் திருப்பதிகத்தை, ஞானசம்பந்தப் பெருமான் நள்ளாற்றில் அருளிச் செய்தார்.. மதுரையில், சமணர்களோடு நடைபெற்ற அனல் வாதத்தில், இந்தப் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல், பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது

பண்: பழந்தக்கராகம்.

புதன், 2 ஏப்ரல், 2014

YAMUNA JAYANTHI..5/4/2014....யமுனா ஜெயந்தி!!!!...


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நம் பாரத பூமியில், நீர் வளம் சேர்க்கும் ஆறுகள் அனைத்தும் தெய்வாம்சம் பொருந்தியவையாகக் கொண்டாடப்படுகின்றன.. கங்கை போலவே புனிதமாகக் கருதப்படும் மற்றொரு ஆறு யமுனை.. அந்த யமுனை பூமிக்கு வந்த திருநாளே 'யமுனா ஜெயந்தி'யாகச் சிறப்பிக்கப்படுகின்றது.. இந்தப் பதிவில், யமுனையைப் பற்றியும், 'யமுனா ஜெயந்தி' கொண்டாடப்படும் முறை பற்றியும் நாம் பார்க்கலாம்!..

சனி, 22 மார்ச், 2014

EKNATH SHASTI...ஏக்நாத் சஷ்டி...(22/3/2014)

Related image

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நம் புண்ணிய பாரத பூமியில் உதித்த கணக்கற்ற மஹான்களில் ஒருவர் ஏகநாதர். ஏகநாதர், மஹாராஷ்டிர மாநிலம் தந்த மஹான்களுள் ஒருவர்.. மராட்டிய மஹான்களின் வரிசையில்,ஞானதேவருக்கு அடுத்தபடியாகவும்,துக்காராம், ராம்தாஸ் போன்றோருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.

இன்றைய பைத்தான் நகர் அன்று  பிரதிஷ்டானபுரம்  என்று அழைக்கப்பட்டது.. 

வெள்ளி, 7 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 10...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.. பதிகம் # 10.


பதிகம் # 10.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 


பொருள்:

"புன்மையான, நிலையற்ற, மாமிசத்தால் ஆன இந்த உடல், புளகாங்கிதம் எய்தி, பொன்னாலாகிய கோயிலே

வியாழன், 6 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 9... மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 9.


பதிகம் # 9

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
குழந்தையின் பசி வேளை அறிந்து, காலம் தவறாது பாலூட்டும் தாயை விடவும்


புதன், 5 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.....SONG # 8...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 8.

Courtesy: Google Images

பதிகம் # 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
தந்தையே!...தேவர்களாயும் தேவலோகமாயும் நின்ற முதற்பொருளே!..காலம், இடம் முதலிய எதன் பொருட்டும் முடிவில்லா ஞானவடிவே!,

செவ்வாய், 4 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU... SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 7


பதிகம் # 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
பாசத்தின் வேரை அகற்றுகின்ற, பழமையான முதற்பொருளாகிய தன்னை (சிவனை) அடையும் வழியை அடியேனுக்கு

திங்கள், 3 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU....SONG # 6.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 6.


பதிகம் # 6.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
ஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு, அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி,

ஞாயிறு, 2 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU..SONG # 5...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.... பதிகம் # 5.

பதிகம் # 5.

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:

தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒரே பரம்பொருளே!, அடியேனது உள்ளத்துள் ஒளிர்கின்ற பேரொளிமயமானவனே!...உண்மையான  உயர்ந்த நிலையை அறியாத, பெருமையேதும் இல்லாத எனக்கு உயரிய பேரானந்த வாழ்வளித்த அன்பின் திருவுருவே!, சொல்லால் விளக்குதற்கு அரிய, செழுமையான சுடர்  வடிவினனே!!, அடியார்களின் செல்வமான சிவபிரானே!, இளைத்த இடத்து, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?!..

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

இறைவன் தனக்குவமையில்லாதான்..ஆகவே 'ஒப்பு உனக்கு இல்லா' என்றார்..

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"
- திருக்குறள்,

ஒரே பரம்பொருளான இறைவன் சிவபிரானே.. ஆகையினால் 'ஒருவனே' என்று போற்றுகிறார்!...

ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருஅண்டப் பகுதி)

உள்ளன்போடு, இறைவனைத் துதிப்போர் உள்ளமே இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில்..

இறைவனோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம் என்றார் ஔவை..

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
`இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.(திருச்சதகம்)

மெய்யடியார்கள், தங்கள் மனதில் பேரொளி மயமான இறைவனது தரிசனத்தை விடாமல் காண்கின்றனர். ஆதலால், 'உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே' என்றார்..

புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் இறைவன் ஒருவனே!.. ஆகையால் , தம்மை 'வீறு இலியேற்கு' என்றார்.. மானிடராய்ப் பிறந்தவர் உயரிய சிவபதம் அறிவது இயலாததால் 'மெய்ப்பதம் அறியா' என்றார்.

அவ்விதம் உயரிய நிலை அறியாத போழ்தும், இறைவன் தம் பேரன்பினால், அந்த மேன்மையான பதத்தை அளித்து அருள் செய்த பான்மையினை, ''விழுமிய தளித்ததோ ரன்பே' என்றார்..

இங்கு 'ஓர் அன்பே' என்ற பதம் மிகுந்த பொருளாழமுடையது. இவ்வுலகியல் விஷயங்களின் பால் நாம் கொள்கின்ற அன்பு நிலையானதன்று.. அதைப் போல், நம் பால், நம் உற்றார் உறவினர், நண்பர்கள் முதலானவர்கள் வைக்கும் பற்றுதலும், நிலையானதல்ல... உண்மையான அன்பு என்பது, இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், நமக்கு அன்னையும் தந்தையும் ஆகிய இறைவன் நம் பால் எப்போதும் சுரக்கின்ற பேரன்புமே... 

அந்தப் பேரன்பின் காரணமாகவே, இறைவன் பெருமையேதும் இல்லாத தனக்கு மேலான பதமளித்தமையால், 'ஓர் அன்பே' என்றார்.

இறைவன், அக இருளை நீக்கும் ஞானமாகிய சுடர் வடிவினன்..ஞானமே செழுமையானது..ஆகவே, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றார்....

பாரும் விசும்பும் அறிய வெனைப்
        பயந்த தாயும் தந்தையும் நீ
    ஓரும் போதிங் கெனி லெளியேன்
        ஓயாத் துயருற்றிட னன்றோ
    யாருங் காண வுனை வாதுக்
        கிழுப்பே னன்றியென் செய்கேன்
    சேரும் தணிகை மலை மருந்தே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே. (செழுஞ்சுடர் மாலை).

என்று வள்ளலார் பெருமான் பாடியருளியதை இங்கு ஒப்பு நோக்கலாம்....

'எய்ப்பிடத்து' என்பது இளைத்த இடத்தில் என்று பொருள்படும்..இளைப்பிற்குக் காரணம்..பலப் பல பிறவிகள் எடுத்தது..

'எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்று சிவபுராணத்தில் வாதவூரார் அருளியிருப்பதை இங்கு பொருத்தி உணரலாம்..

முடிவற்ற பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி, பல பிறவிகள் எடுத்தும், இறைவனருள் கிட்டாமையினால் இளைத்திருக்கும் இத்தருணத்தில்,  'ஏதாகிலும் சரி, உன்னை  நான் இனி விடேன்' என்று இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக, இறையருளும் அதன் வழியே முத்தி நிலையும் கை கூடப் பெற்றதால், இனி எம்பிரான் தனித்து எழுந்தருளுவது இயலாது என்று உரைத்தார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 1 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 4.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 4

பதிகம் # 4
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொருள்

இரக்கம், பரிவுடைய சுடர் போன்றவனே!..  பக்குவ நிலையை அடைந்த கனி போன்றவனே!..பெரும் ஆற்றலை உடைய, அருமையான தவத்தினை உடையவர்க்கு அரசனே!..உண்மைப் பொருளை விளக்கும் நூலாக இருப்பவனே, புகழ்ச்சிக்கு அடங்காத, இன்பமாக இருப்பவனே!..யோகத்தின் மூலம் அடையத் தக்க பொலிவானவனே!... தெளிவினை உடைய அடியார்களது சிந்தையில் புகுந்து உறையும் செல்வமானவனே!.. சிவபெருமானே!..இருள் நிறைந்த இந்த உலகத்தில், உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளுவது?!!

சற்று விரிவாகப் பார்க்கலாம்..

அருளுடைச் சுடரே ---ஒளி தரும் சுடர் வெம்மையையும் தருவது, தீண்டுவோரைச் சுடுவது.. ஆனால் இறைவன் தாயினும் சாலப் பரிந்து அடியாரைப் பேணுதலால், 'இரக்கம் நிறைந்த சுடர்' என்னும் பொருள் வருமாறு, அருள் நிறைந்த சுடர் என்றார்..இதற்கு மற்றொரு பொருளும் கூறலாம்.. இறைவன் பேரொளி வடிவானவன், ஆயினும் அவனிடமிருந்து வெளிப்படும் ஒளியானது அடியார்களைச் சுடுவதில்லை.. தண்மையே தருகிறது.. ஆகையினாலும் இறைவன் அருளுடைச் சுடர்.

அளிந்ததோர் கனியே--நன்கு கனிந்து பக்குவமடைந்த கனி போன்றவன் இறைவன்..காயானது நன்கு பழுத்து கனிந்த பின்னரே சுவை தருவது நாம் காயினை உண்ணுவதை விடவும் கனியினை உண்ணுதலையே விரும்புவோம். இறைவன் அவ்வாறான சுவை மிகுந்த கனி போன்றவன்.. .  

இதற்கு வேறொரு பொருளும் கூறலாம்.. அடியார்கள் பரிபக்குவ நிலையை அடைந்த பின்னரே இறைவன் அவர்களுக்கு அருள் சுரப்பான்.. பரிபக்குவ நிலையை அடைந்த அடியார்களை இறைவன் மிக உயர்ந்த பரிபக்குவ‌(தன் ) நிலைக்கு உயர்த்துதல் எளிது ஆகையால், இறைவனைப் பக்குவமடைந்த, கனிந்த, கனி என்றார்..

பெருந்திறல் அருந்தவர்க் கரசே--தவநெறியின் மேன்மை இங்கு விளக்கப்படுகின்றது.. பேராற்றல் தவத்தினால் கிட்டும்..முனிவர்களது தவ ஆற்றலின் மேன்மை நாம் அறிந்ததே!.. இறைவனை அடையும் பொருட்டு, உயர்வான தவநெறியில் சென்று, மிகக் கடுமையான 'பஞ்ச தவம்' முதலானவைகளைச் செய்யும் அடியார்களுக்கு அருள் மழை பொழிபவன் இறைவன்..   ஆகையால், பெரும் திறன் படைத்த, அருமையான(அரிய, கடினமான) தவ நெறியில் செல்வோரின் அரசரே! என்றார்.

இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்... பேராற்றலாவது உள் மனதின் ஆற்றலே ஆகும்.. கடினமான தவநெறியில் செல்வது, மிகுந்த மனோபலமுள்ளவர்களாலேயே இயலும்..அவர்கள் மேற்கொள்ளும் நெறிகள், மேலும் மேலும் அவர்களது உள் ஆற்றலைப் பெருக்கி, தவநெறியின் குறிக்கோளான இறைவனை அடைவிக்கும்..அத்தகைய பேராற்றல் வாய்ந்த தவசீலர்களின் அரசர் என்று இறைவனைப் போற்றுகின்றார் வாதவூரார்.

அருந்தவ மாமுனி வர்க்கரு 
ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் 
பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர 
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு 
நாகேச் சரத்தானே(சுந்தரர் பெருமான்)

\பொருளுடைக் கலையே---இங்கு பொருள் என்பது மெய்ப்பொருளையே குறிக்கும்.. வெளிப்படையாகப் பார்க்கும் போது, மெய்ப்பொருளை விளக்கும் நூலாக இருப்பவன் இறைவன் என்று பொருள்படுகிறது இது..அதாவது, உயிர்கள் அடைய வேண்டிய, அடையத் தகுந்த மெய்ப்பொருள் இறைவன் ஒருவனே!.. அவனை அடையத் தகுந்த வழியும் அவனருளாலேயே கிட்டும்!.. இன்னும் விரிவாகப் பார்ப்போமானால், அவனே அந்த வழியாகவும் இருக்கிறான்...இதை நுட்பமாக விளக்குவது கடினம்..

வீணான, மற்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, மெய்ப்பொருளான இறைவனையே சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக இவ்வரி உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே----இறைவனது மகிமையை, புகழை, ஓதி முடித்தல் என்பது இயலாது.. அவனது மகிமைக்கு அளவில்லை.. ஆதலால், 'புகழ்ச்சியைக் கடந்த' என்றார்.. சிற்றின்பமாகிய உலகியல் இன்பங்கள் யாவும் உண்மையில் போகமல்ல. இறைவனோடு கலந்திருத்தலாகிய பேரின்பமே 'போகம்' என்று கொள்ளத் தக்கது.. அதுவே உயிர்களுக்கு எந்நாளும் நன்மை செய்யக் கூடியது.. ஆகவே 'போகமே' என்றார்.

யோக நெறியில் நிற்போர், தங்கள் யோக சாதனைகளின் மூலம் எம்பெருமானை  மகிழ்வித்து, அவரோடு ஒன்றி நிற்றலாகிய முத்தி நிலையைப் பெறுகின்றனர்.. யோகியருக்கே அவர்களது சாதனைகளின் பலன் அனுபவ ரீதியாகப் புலப்படும்...அந்த அனுபவத்தின் வாயிலாக, அகக்காட்சியில் மட்டுமே காணக் கிடைப்பவன் ஆதலால், ' பொலிவே' என்றார். யோகியருக்கு உள்ளூரப் பொலிபவனாக விளங்குபவன் இறைவன்.

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே---அவ்வாறு யோக நெறியில் நிற்பவரது சித்தம் தெளிவுடையது.. அடைய வேண்டிய பொருள், அதற்குச் செல்ல வேண்டிய மார்க்கம் என அனைத்திலும் தெளிந்த சிந்தனை உடையவர்களாக, தம் சாதனைகளில் ஈடுபடுபவர்கள் யோகிகள்.. ஆகவே, தெளிந்த சிந்தனையுள்ள அவர்களது சிந்தையில் புகுந்து அருளும் செல்வமே என்றார்..

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. ---இருள் இடம் என்று இங்கு சொல்லப்படுவது, இவ்வுலகமே...  மாயையாகிய இருள் படர்ந்து விளங்குவதால் இவ்வுலகம் இருளின் இடமாக இருக்கிறது.. இருளை அகற்றும் மெய்ஞ்ஞானச் சுடர் இறைவனே!..

 வல்வினையேன் றன்னை. மறைந்திட மூடிய மாய இருளை.
 (சிவபுராணம்)..

தம் அகத்தே மூடிய மாய இருள் நீங்கும் பொருட்டு, தாம் இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததால், பெருங்கருணைப் பேராறாகிய இறைவன், முத்தி நிலையை அருளி விட்டான்.. தாம் சிவத்தோடு கலந்து விட்டதால், இனி, எம்பிரான், தனித்து வேறெங்கும் எழுந்தருள இயலாது என்று உரைக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.