நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 ஜூன், 2014

SRI PARAINAACHIYAAR AMMAN THIRUKKOIL, PA.KARUNGULAM..ஸ்ரீ பறைநாச்சியார் அம்மன் திருக்கோவில், ப. கருங்குளம்:

அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!

'மின் தமிழ்' குழுமத்தில், 'கிராம தேவதைகள்' இழையில், ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன்(பரநாச்சியம்மன்) குறித்து நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

கோயில் அமைந்திருக்கும் இடம்:
இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.

கோயிலின் முக்கிய அம்சங்கள்:

1. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.
2. மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.

வியாழன், 12 ஜூன், 2014

CHAMPAKA CHATHURDASHI VIRATHAM (12/6/2014) .....சம்பக சதுர்த்தசி விரதம்


அன்பார்ந்த  நண்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம் 'சம்பக சதுர்த்தசி'.. உமையொரு பாகனான சிவபிரானைத் துதிக்கும் விரதங்களுள் ஒன்றான இது வங்காள தேசத்தில் பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகின்றது. வங்காளிகள் மட்டுமின்றி, பெரும்பாலான வட இந்தியர்களும், சிவபிரானைத் துதித்து, இவ்விரதத்தை பக்தி சிரத்தையோடு அனுசரிக்கிறார்கள்.

செவ்வாய், 3 ஜூன், 2014

ARANYA GOWRI VIRATHAM, ARANYA SHASTI, VINTHYAVASINI PUJA.(4/6/2014 ).ஆரண்ய கௌரி விரதம்.ஆரண்ய சஷ்டி, விந்த்யவாஸினி பூஜை


அன்பார்ந்த‌ நண்பர்களுக்கு வணக்கம்!..

கௌரி விரதங்களைப் பற்றி நாம் சில பதிவுகளில் பார்த்து வருகிறோம்..இந்தப் பதிவில், 'ஆரண்ய கௌரி விரதம்/ஆரண்ய சஷ்டி விரதம், பூஜை' ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்..

காடு, மலை, நதி என அனைத்தையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நமது மரபு.