நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA CHARANAM....ஸ்ரீ கணேச சரணம்!..


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நாளை 29/8/2014 விநாயக சதுர்த்தி..ஸ்ரீவிநாயகரைப் பற்றியும், விநாயக சதுர்த்தி பூஜை பற்றியும் இங்கு பதிவிட்டிருக்கும் முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்குங்கள்.




இங்கு கர்நாடகாவில் இதுவே பெரிய பண்டிகை.. தீபாவளி கூட சிறப்பாகக் கொண்டாடமாட்டார்கள்..

சனி, 16 ஆகஸ்ட், 2014

SRI KRISHNA VAIBHAVAM..ஸ்ரீ கிருஷ்ண வைபவம்.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

இன்று (17/8/2014)  கோகுலாஷ்டமி திருநாள்..கோகுலாஷ்டமி குறித்தும், அதைக் கொண்டாடும் விதம் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

சின்னக் கண்ணன் லீலைகள் சொல்லச் சொல்ல இன்பமல்லவா!.. 

பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்?. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக அவதரித்தது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

PERUKI VARUM KAAVIRI (AADI PERUKKU..3/8/2014) ...... பெருகி வரும் காவிரி (ஆடிப் பெருக்கு, 3/8/2014).

அன்பர்களுக்கு வணக்கம். ஆடி பெருக்கு தினத்தில் காவிரித் தாய் பொங்கிப் பெருகுவதைப் போல் நம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நலமும் வளமும் பொங்கிப் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

 முந்தைய வருடங்களில், ஆடி பெருக்குக்கான சிறப்புப் பதிவில், காவிரி ஆறு தோன்றிய புராணம், ஆடி பெருக்கில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் என்று பார்த்தோம்.   பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

காவிரியை ஒரு 'ஆறு' என்ற அளவில் மட்டும் நம் தமிழ் மக்கள் நினைப்பதில்லை. பழங்காலத்திலிருந்து, ஒரு பெண்ணாய், சோறூட்டும் அன்னையாய், ஒரு பெரிய கலாசாரத்திற்கு வித்தாய், வாழ்வாதாரமாய்