நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

SONG # 5....THAYUMANAVADIGAL ARULIYA..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 5... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 5..
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

திங்கள், 29 செப்டம்பர், 2014

SONG # 4....THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAI VALAR KAATHALI'......பாடல் # 4.. தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 4.. 
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

முதலில் சில சொற்களுக்கான பொருளை மட்டும் பார்க்கலாம்..மிடி - வறுமை. கலம் - மட்பாண்டம். வாசம் - உறைவிடம்.   துடி - நடுக்கம்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

SONG # 3....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 3... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'..


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!
பாடல் # 3..
பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
    பொய்யென் றெனைக்காட்டிஎன்
  போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
    போகபூ ரணவெளிக்குள்
ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
    எல்லாஞ்செய் வல்லசித்தாம்
  இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
    எளியேன் மறந்துய்வனோ
வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே.
பொருள்:

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே....."நான்மறைகள் மற்றும், திருமுறைகளாகிய ஆகமங்களின் தன்மையை,  விளக்கும் உள்முகக் கண் அதாவது அறிவுக் கண் இல்லாதவர்க்கும், உன் புகழைக் கேட்கும் பேறில்லாத‌ செவிடர்க்கும்,  வீண் வாதம் செய்வதில் மிக்க விருப்புடைய‌வர்க்கும் கிட்டாத, மூன்று திருவிழிகளை உடைய, மாமருந்தாகிய அமிர்தத்துக்கும் அமிர்தம் போன்றவளே!.."

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

SONG # 2.. THAYUMANNAVDIGAI ARULIYA MALAIVALAR KAATHALLI.....பாடல் # 2.. தாயுமானவடிகள் அருளிய மலைவளர் காதலி.


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!...
பாடல் # 2..
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
      சிற்றிடையி லேநடையிலே
   சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
      சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
      பொடியிலே அடியிலேமேல்
   பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
      புந்திதனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
      நின்னடியர் கூட்டத்திலே
   நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
      ஞேயத்தி லேயுன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
      வளமருவு தேவை அரசே
   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
      வளர்காத லிப்பெண்உமையே.

வியாழன், 25 செப்டம்பர், 2014

THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KATHALI'...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி!'.


அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்!.

அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!.. நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அம்பிகையின் அருளாட்சி நிறைய வேண்டுகிறேன்!..

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

JIVIT PUTRIKA VRAT....ஜீவித்புத்ரிகா விரதம் (16/9/2014)

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

நம் பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விரதங்களையும் அவற்றுக்கான சம்பிரதாயங்களையும் சில பதிவுகளில் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம்..அந்த வரிசையில் இன்று 'ஜீவித் புத்ரிகா' விரதம் குறித்துப் பார்க்கலாம்.