நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 26 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 9....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'.. பாடல் # 9.



திருச்சிற்றம்பலம்.

பாடல்;

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!.. தென்னை மரங்கள் பரவியுள்ள திருவுத்தரகோசமங்கையில், தங்குதல் பொருந்திய, சோதி வடிவான, ஒப்பற்ற திருவுருவமுடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியை அறுத்து, எம் போன்றவரையும் ஆட்கொள்ளும் பொருட்டு, திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்திய மங்கையும்(உமாதேவியும்) தானுமாய்த் தோன்றி,

வெள்ளி, 25 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.....SONG # 8. ..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 8.


திருச்சிற்றம்பலம்:

பாடல்:

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலில் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை  வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

இந்தப் பாடலில், 'ஞாலம் மிக' என்பதை முதலாவதாகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. 

'உலகம் உய்யும்படியாக, உயர்ந்த கயிலை மலைச் சிகரத்தினின்று, நிலவுலகில் இறங்கி  வந்து, 'வந்தி' தந்த பிட்டினை, அமுதாக உண்டும், வலைஞனாக, கடலில் கட்டுமரத்தின் மீது ஏறி மீன் பிடித்தும், குதிரைகளின் மீதேறி பரிமேலழகனாக வந்தும் நமையாண்ட இறைவன்,

வியாழன், 24 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 7.



திருச்சிற்றம்பலம்!
பாடல்:

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! ..நினைத்தற்கரிய, திருவுத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் நிலையாக, பொலிவுடன் எழுந்தருளியிருக்கும் பெருமையுள்ள வேதியனும், தன் புகழை பலகாலும் சொல்லி,

புதன், 23 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG..# 6....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்.. பாடல் # 6.

திருச்சிற்றம்பலம்:

பாடல்:

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"தாமரை மொட்டு போன்ற, அணிமணிகளை அணிந்த தனங்களையுடைய பெண்களே!...உமாதேவியாரை, தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டருளியவனும், திருவுத்தரகோசமங்கையில் உள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடாமுடியை உடையவனும்,  நாய்க்கு ஒப்பான எம்மை,

செவ்வாய், 22 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.

திருச்சிற்றம்பலம்!..

பாடல்:

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"அழகிய தனங்களையுடைய பெண்களே!!.. 'இறைவன், ஆணோ, பெண்ணோ, அலியோ..' என்று அறிவதற்காக, அயனும் மாலும் தேடியும் கண்டடைய முடியாத கடவுளாகிய எம்பிரான், தன் தனிப்பெருங்கருணையால், தேவர் கூட்டம் தோற்று அழியாதபடிக்கு

திங்கள், 21 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 4...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 4.


திருச்சிற்றம்பலம்!!!!...

பாடல்:

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாய் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே!....விடம் அமர்ந்த‌ கண்டத்தை உடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற,  உயர்ந்த மாடங்களை உடைய,


ஞாயிறு, 20 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல் பாடல் # 3.

திருச்சிற்றம்பலம்!.

பாடல்:

முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"பொன்னாலான அழகிய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!,..ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், பலநூறு கோடி தேவர்களும், முனிவர் கூட்டமும் அவனது அருளுக்காக காத்திருக்கும் போது, தனது விபூதியை எனக்களித்து, தன் கருணை வெள்ளத்திலே, மிகுதியாக யான் ஆழ்ந்திருக்குமாறு அருளிய மணி (மாணிக்கம்) போன்ற எம்பிரான், எழுந்தருளியிருக்கும் அழகிய உத்தரகோசமங்கையில் உள்ள,  ஒளி பொருந்திய,

வெள்ளி, 18 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 2..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' பாடல் # 2


திருச்சிற்றம்பலம்!

பாடல்:

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

மயில் போன்ற சாயலும், அன்னம் போன்ற நடையழகும் உடைய பெண்களே!....மூன்று விழிகளை உடையவனும்,

வியாழன், 17 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 1..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 1

Image result for lord siva and sakthi in swing
அன்பார்ந்த பெரியோர்களுக்கு பணிவான வணக்கம்!

சில தினங்களுக்கு முன்பாக, சென்னையில், ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது. திருமண நிகழ்வுகளில் 'ஊஞ்சல்' என்பதும் ஒன்று. மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, அதை முன்னும் பின்னும் ஆட்டியவாறு, ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர். அப்போது, திருவாசகத்தில் 'திருப்பொன்னூசல்' பாடுவது வழக்கம்.. இம்முறை அந்தப் பாடல்களைக் கேட்ட போது,  ஆடி மாதப்பிறப்பினை ஒட்டி,, 'திருப்பொன்னூசல்' பாடல்களுக்கு ,தெரிந்த அளவில் பொருளெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. எம்மால் ஆவது யாதொன்றும் இல்லை என்பது சர்வ நிச்சயம்.. அரனருளாலேயே இந்த எண்ணம் தோன்றியதென்பதால் அவனருளாலேயே இது நிகழ வேண்டும்.. எம்பெருமான் எம் உள்ளத்தமர்ந்து, இவ்வரிய செயலை நிறைவேற்றித் தர மனமுருகி வேண்டி, இவ்வரிய செயலைத் தொடங்க முற்படுகின்றேன்..

இதைப் படிக்கும் அன்பர்கள், இதில் நான் செய்திருக்கும் தவறுகளைச் சுட்டி, திருத்துமாறு  கோருகிறேன்....கூடுமானவரை, தினம் ஒன்றாக பொருளெழுத இறையருள் கூட்டுவிக்கும் என்று நம்புகிறேன்..

வெள்ளி, 4 ஜூலை, 2014

SUKRAVARA LAKSHMI PUJA/ SHAAKA VIRATHAM...சுக்ரவார லக்ஷ்மி பூஜை/ ஷாக விரதம்!!.....

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

திருமகளின் அருள் நாடி, பற்பல விரதங்களையும் பூஜைகளையும் நாம் செய்கிறோம்!.. பொருட்செல்வம் மட்டுமின்றி, வாழ்வில் நாம் விரும்பும் அனைத்து விதமான நற்பேறுகளையும் ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதிப்பதால் நாம் பெறலாம்.

தூயது அனைத்திலும் தேவியைக் காண்பது நமது மரபு... குத்து விளக்கின்  முத்துச் சுடரில், தூய ஆடைகளில், மணம் வீசும் மலர்களில், சுத்தமான இருப்பிடங்களில் எல்லாம் ஸ்ரீதேவி வாசம் செய்கிறாள்.. நல்லனவற்றையே விரும்பி, பேசி, செய்பவர்கள் உள்ளங்களிலெல்லாம் உறைகிறாள்..