நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

DIWALI GREETINGS!.....தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!....


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்!.

இந்த வருட தீபாவளி தினத்தில், நம் அனைவர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைய‌, இறைவனை பிரார்த்திக்கிறேன்!... 

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

தீபாவளி குறித்த முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்கவும்...

சனி, 11 அக்டோபர், 2014

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 2....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி..

விரதக் கதை:

பல்வேறு விரதக் கதைகள் கர்வா சௌத் குறித்துச் சொல்லப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 1.....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 1.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!...

விரதப் பதிவுகள் போட்டு கொஞ்சம் நாளானதால், இன்னிக்கு ஒரு விரதப் பதிவு!.. நாம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்கள், அவற்றின் வழிமுறைகள், கதைகள் எனப் பார்த்து வருகிறோம் இல்லையா.. அந்த வரிசையில், இன்று கொண்டாடப்படும் ஒரு விரதம் பற்றி பார்க்கலாம்.. வழக்கமாக இந்தி திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பவர்களுக்கு இந்த விரதம் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்..  பெண்கள், மாலை வேளையில் சந்திரனை, மாவு சலிக்கும் சல்லடையால் நோக்கி வணங்கும் காட்சி பெரும்பாலனவற்றில் இடம் பெற்றிருக்கும். அந்த விரதம் தான் நாம் இன்று காணப் போவது..' காரக சதுர்த்தி விரதம்' என்றும் சொல்லப்படும் இது 'கர்வா சௌத்' என்று வடமாநிலங்களில் பிரபலமாக வழங்கப்படுகின்றது..

திங்கள், 6 அக்டோபர், 2014

SONG # 8...THAYUMANAVADIGAL ARULIYA ..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 8.... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


பாடல் # 8.

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

வெள்ளி, 3 அக்டோபர், 2014

SONG # 7...THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 7...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 7.
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
  விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

புதன், 1 அக்டோபர், 2014

SONG # 6.....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 6, தாயுமானவடிகள் அருளிய, 'மலைவளர் காதலி'..


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 6,
பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்: