நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!.. PART 18....கண்ணனை நினை மனமே!..பகுதி 18....பிரளயமும் சிருஷ்டியும்.....(தொடர்ச்சி..)

(சென்ற பதிவின் தொடர்ச்சி!)..

"பிரம்ம தேவர், அவருடைய பகல் பொழுது நிறைவடைந்ததும், உறக்கத்தை விரும்பியவராக, உம்மிடம்(பகவானிடம்) இணைந்தார்...மூன்று உலகங்களும், உம் திருவயிற்றில் ஒடுங்கின. அப்போது, இந்த பிரபஞ்சம் முழுவதும், சமுத்திர மயமாகவே ஆகிவிட்டது".

KANNANAI NINAI MANAME!...PART 17..கண்ணனை நினை மனமே!.. பகுதி 17..பிரளயமும் சிருஷ்டியும்.

பட்டத்திரி, இந்த தசகத்தில், பிரளயமும் அதைத் தொடர்ந்து, சிருஷ்டி நடைபெறும் விதமும் பற்றி விவரிகின்றார். 

KANNANAI NINAI MANAME!...PART..16...கண்ணனை நினை மனமே!..பகுதி 16..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..(தொடர்ச்சி)..

(சென்ற பதிவின் தொடர்ச்சி...).

நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருʼதா வித்³யுல்லதாதுல்யயா
விஸ்²வோன்மாத³னஹ்ருʼத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஸா²ந்தரா| 
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ​: ஸ்வயம்ʼ லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம்ʼ தத்தே பத³ம்ʼ தே³ஹி மே ||

("ஸ்ரீ அப்பனே!, பல தேவமாதர்களால் சூழப்பட்டும், எல்லா உலகங்களையும் மயக்க வல்ல, மின்னல் கொடி போன்ற திவ்ய திருமேனியால் திசையனைத்தையும் பிரகாசிக்கச் செய்து கொண்டும், உமது திருவடித் தாமரைகளின் வாசனையை முகர்வதொன்றிலேயே விருப்பத்துடனும், எந்த உலகத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியானவள் விளங்குகின்றாளோ, அந்த வைகுண்ட பதவியை எனக்கும் தந்தருள வேண்டுகிறேன்!!!....").

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME...PART 15...கண்ணனை நினை மனமே!..பகுதி 15..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..

பட்டத்திரி, இந்த தசகத்தில் பிரம்மாவின் தோற்றம் குறித்தும், அவர் சிருஷ்டி காரியங்களைத் தொடங்கும் முன்பாக, தவம் செய்யத் தொடங்கியது, பிரம்ம தேவருக்கு, வைகுண்டம் காட்டப்பட்டது, அங்கு அவர் கண்ட காட்சிகள், பிரம்ம தேவரின் பிரார்த்தனை  போன்றவற்றைக் குறித்தும் விளக்குகின்றார் . பிரம்ம தேவருக்கு 'ஹிரண்ய கர்ப்பன்' என்ற பெயரும் உண்டு.. அதன் காரணமாகவே,  இந்த தசகத்திற்கு, "ஹிரண்ய கர்ப்ப உற்பத்தி"  என்ற பெயர். 

KANNANAI NINAI MANAME!... PART 14....கண்ணனை நினை மனமே!.. பகுதி 14....விராட்புருஷ உருவம்!..

 

ஒன்றான பரம்பொருள், பலவாகி விரிந்ததோடு, எல்லாமும் தானாகி நின்றதொரு திறம் போற்றிப் பாடுகின்றார் பட்டத்திரி!.. காருண்ய ரூபனான பரமாத்மா, பரந்த இப்பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்து, சகல லோக ஸ்வரூபனாக அருளும் அற்புதத்தை நாமும் தியானிக்கலாம்!...

KANNANAI NINAI MANAME!.. PART 13...கண்ணனை நினை மனமே!..பகுதி 13..விராட்புருஷ உற்பத்தி!..(தொடர்ச்சி).


விராட்புருஷ உற்பத்தி குறித்து, பட்டத்திரி மேலும் சொல்கிறார்!..

​"குருவாயூரப்பா!..நீர்  மாயைக்கு அருகில் இருந்தாலும், அதனுடன் கலவாத ரூபத்துடன் இருப்பதால், ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறப்படுகின்றீர்!..அந்த மாயையில் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் நீரே!..உம்மால் ஏவப்பட்ட அந்த மாயையே, காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக விளங்குகின்றது.. அதுவே, புத்தி தத்வம் எனப்படும் 'மஹத்' தத்வத்தை உண்டாக்கியது..".

KANNANAI NINAI MANAME...PART ..12...கண்ணனை நினை மனமே!.. பகுதி 12..விராட்புருஷ உற்பத்தி!..


சென்ற பதிவு குறித்து சிறியதொரு விளக்கம்!..

சென்ற பதிவில், "சத்யோ முக்தியை விரும்பினால், ஆறு ஆதாரங்களைக் கடந்த பின் உம்மிடம் லயிக்கின்றான்" என்று வரும் வரி குறித்த அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமான விளக்கம் இது.. ஆறு ஆதாரங்கள் என்பது நம் உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களைக் குறிக்கும்.. இது குறித்து, முன்பே 'ஆறாதாரமும் மூலாதாரமும்' (சொடுக்குக) பதிவில் எழுதியிருக்கிறேன்.. அதனைத் தொடர்ந்த பதிவுகளில் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்தைக் குறித்தும் விளக்கியிருக்கிறேன். பதிவுகளில் இருக்கும் விஷயங்கள், பெரியோர்களின் வாய்மொழி மூலமாகவும், அவர்கள் பரிந்துரைத்த நூல்களில் இருந்த தகவல்களைத் தொகுத்தும் எழுதப்பட்டன‌.