நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME... PART 33.....கண்ணனை நினை மனமே.. பகுதி 33.. துருவ சரித்திரம்.. (தொடர்ச்சி)...


துருவன் தவம் செய்யச் சென்றதும், செய்தியறிந்த துருவனின் தந்தையின் மனம் கலக்கமடைந்தது. தான் செய்த தவறை நினைத்து வருந்தினான். அப்போது அவன் முன் வந்த நாரத மஹரிஷி, அவனை சமாதானப்படுத்தினார்.

மதுவனத்தில், பாலன் துருவன், பகவானிடம் மனதை அர்ப்பணம் செய்து, படிப்படியாக, தன் தவத்தின் கடுமையை அதிகரித்தான். இவ்வாறு ஐந்து மாதங்கள் கழிந்தன. 

வெள்ளி, 19 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME....PART 32...கண்ணனை நினை மனமே!... பகுதி 32.....துருவ சரித்திரம்


இந்த தசகத்தில், மகாத்மாவும் பக்த சிரேஷ்டனுமான துருவனின் திவ்ய சரித்திரம் உரைக்கப்படுகின்றது. பக்தர்களின் சிறந்தவரும், பகவானின் கருணைக்கு அதிவிரைவில் பாத்திரமானவருமான துருவனின் சரித்திரம்,  படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பகவானின் மேல் அசையாத பக்தியை உருவாக்க வல்லது!.. 

தேவரிஷியான நாரதர், 'வேறு எவராவது இப்பூவுலகில் பல ஆண்டுகளிருந்த போதிலும், துருவன் அடைந்த பதவியை (பதத்தை) அடைய ஆசையாவது கொள்வானா?' என்று துருவனின் புகழை உயர்த்திக் கூறுகின்றார் (ஸ்ரீமத் பாகவதம்).

'இதனை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுள் தானாகவே ஆனந்தானுபவம் பெற்று சித்தியடைவான்' என்று சொல்கிறது ஸ்ரீமத் பாகவதம்..

துருவ சரித்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாக உள்ளது.  நாம் இங்கு பட்டத்திரியின் திருநோக்கின் வழியாக துருவ சரித்திரத்தைப் பார்க்கலாம்!.

KANNANAI NINAI MANAME...PART 31....கண்ணனை நினை மனமே!... பகுதி 31..த‌க்ஷ யாகம்.


த‌க்ஷ பிரஜாபதியின் யாகம் பற்றி, அநேகமாக, நம்மில் பலருக்குத் தெரிந்திருக்குமெனினும், இந்தப் பதிவில், பட்டத்திரியின் திருநோக்கு வழியாக, நாம் தக்ஷ யாகம் பற்றிப்  பார்க்கலாம்.​