நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME.. PART 36.. PRUTHU CHARITHRAM...கண்ணனை நினை மனமே.. பகுதி 36.. ப்ருது சரித்திரம். (தொடர்ச்சி..)


வேனன் அழிந்ததும், முனிவர்கள் வேதனையடைந்தனர்.. மீண்டும் நாட்டிற்கு அரசன் வேண்டுமல்லவா?!...துஷ்டர்களாகிய நாட்டு மக்களுக்கு பயந்தவர்களான‌ முனிவர்கள், வேனனின் தாயிடம் சென்று, அவளால் பல நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வேனனின் உடலை வாங்கி, அதன் தண்டாயுதம் போன்ற துடையை தங்கள் மந்திர சக்தியால் கடைந்தனர். அதனால், வேனனின் பாவம் விலகியது.. அதன் பின், கை கடையப்பட்ட போது, பகவான் (ப்ருது என்னும் பெயருடையவராக) அதிலிருந்து தோன்றினார்!!!!!!....

KANNANAI NINAI MANAME.. PART 35... PRUTHU CHARITHRAM..கண்ணனை நினை மனமே.. பகுதி 35.. ப்ருது சரித்திரம்.


பகவான், ஜீவர்களைக் கடைத்தேற்ற வேண்டி, பற்பல அவதாரங்களை எடுத்தார். அவற்றுள் தசாவதாரங்கள், மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அந்தப் பத்து அவதாரங்களைத் தவிரவும், பகவான் எடுத்தருளிய மற்ற அவதாரங்கள், ஸ்ரீமத் பாகவதத்திலும், ஸ்ரீமந் நாராயணீயத்திலும் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே, ஸ்ரீ ப்ருது சக்கரவர்த்தியின் அவதார வைபவம்.

சனி, 11 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME....PART 34...கண்ணனை நினை மனமே!... பகுதி 34...துருவ சரித்திரம் (தொடர்ச்சி).

எம்பெருமான் துருவனுக்கு ஆசி கூறி, அவன் முன்பிருந்து தம் திருவுருவை மறைத்தருளியதும், அவன்  தன் நாட்டு மக்கள் அனைவரையும்  மகிழ்விப்பவனாக, நகருக்குத் திரும்பினான். தன் தந்தை வானப்பிரஸ்தம் மேற்கொண்ட பிறகு, அரசாட்சியை ஏற்றான்.  நீண்ட காலம் அரசாண்டு இன்புற்று வாழ்ந்தான்.