நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015

KANNANAI NINAI MANAME.. PART 45...கண்ணனை நினை மனமே!...பகுதி 45..அஜாமிளன் சரிதம்...

இறை நாமங்களின் பெருமையை, எத்தனை எத்தனையோ விதங்களில் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நாமம், நாமிக்கு நிகர். இறைவனின் திருநாமமும் இறைவனும் வெவ்வேறல்ல.. கடக்க முடியாத துன்பங்களைக் கடக்க வைக்கும் உத்தம சாதனம் இறைவனின் திருநாமமன்றி வேறில்லை... பகவானின் திருநாமங்களை சதா சர்வ காலமும் சிந்திப்பவர்களுக்கு, இயலாத காரியமென்று ஒன்றில்லை..

KANNANAI NINAI MANAME!.. PART 44...கண்ணனை நினை மனமே!...பகுதி 44... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..(தொடர்ச்சி...).


பாரத வர்ஷத்தில், குறிப்பிடத்தகுந்த பக்தர்களுடன் கூடிய நாரதரால் உபாசிக்கப்படுகிறார் பகவான். நர நாராயண ஸ்வரூபத்தில் அருள் புரியும் எம்பெருமானை, நாரத முனி, யோகத்தாலும் ஞானத்தாலும் பல்வேறு துதிகளாலும் போற்றிப் பணிகிறார். இத்தகைய மகிமையுள்ளவராகவும், சாது ஜனங்களை, பிரளய காலம் வரை காப்பாற்றுபவராகவும் விளங்கும் பகவானை துதிக்கிறார் பட்டத்திரி.