நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 13 ஜனவரி, 2016

KANNANAI NINAI MANAME.. PART 47..கண்ணனை நினை மனமே!...பகுதி 47...சித்ரகேது உபாக்கியானம்... (தொடர்ச்சி..).​


சித்ரகேது, நாரதரால் மந்திர உபதேசம் அருளப் பெற்றான். ஆதிசேஷ ஸ்வரூபனான பகவானை திருப்தி அடையச் செய்ய வல்ல ஸ்தோத்திரத்தையும் பெற்றான். அவற்றின் மூலம், ஒருமுகமான மனதுடன் பகவானை நினைத்துத் தவம் புரிந்தான். அவனது தவம் ஏழு நாட்களில் மிகச் சிறந்த பலனை அளித்தது. வித்யாதரர்களுக்கு அதிபதியாகும் நிலையை அடைந்தான். ஆயினும், குறையாத பக்தியுடன் பகவானை சேவித்து வந்தான்.

KANNANAI NINAI MANAME.. PART 46..கண்ணனை நினை மனமே!...பகுதி 46...சித்ரகேது உபாக்கியானம்...



ஸ்ரீமந் நாராயணீயம், பகவானின் லீலைகளுடன் கூட, பிரசித்தி பெற்ற சில வம்சத்தவர்களின் கதைகளையும் சொல்லி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.  இந்த வம்சத்தவர்களின் கதைகளைச் சொல்லி வருகையில், பகவானின் லீலா விநோதங்கள் இவற்றுடன் இரண்டறக் கலந்திருப்பதையும்  ந‌ம்மால் உணர முடியும்.