நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM..PART 5.. கண்ணனை நினை மனமே... பாகம் 2...பகுதி 5.. கஜேந்திர மோட்சம்..

Image result for gajendra moksha

யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?.


சனி, 17 டிசம்பர், 2016

MY THIRD E-BOOK...என் மூன்றாவது மின்னூல்... 'திருவெம்பாவை (உரையுடன்).'.

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!..

மின் தமிழ் குழுமத்தில் முன்பு நான் எழுதிய, திருவெம்பாவை, (பொருளுரையுடன்) இன்று மின்னூல் வடிவம் பெற்றிருக்கிறது...இதனை, களக்காடு திருத்தலத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சத்தியவாகீசுவர ஸ்வாமியின் திருவடிகளில் பணிவோடு சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.