நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU....PART 21..கண்ணனை நினை மனமே.. பகுதி 21... பக்திக்கே வசப்படுவான் பரமாத்மா!..(அம்பரீஷ சரிதம்).

Related image

அரசராக இருந்த போதிலும், தன்னை பகவானது சேவகனாகவே கருதிக் கொள்ளும் அம்பரீஷர் , பகவத் பக்தியையே தனது பெரும்  செல்வம் என எண்ணியவர்.

KANNANAI NINAI MANAME...BAGAM IRADU.. PART..20..கண்ணனை நினை மனமே.. பகுதி 20...அம்பரீஷ சரிதம்.

Related image

பக்தி  என்பது பூர்வ புண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது. க‌டும் வெயிலில் குடை போல்,  இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும். நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம் தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.

'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.

KANNANAI NINAI MANAME....BAGAM IRADNU... PART..19..கண்ணனை நினை மனமே.. பகுதி 19. 'கொழுங்கயலாய்' அவதரித்த எம்பெருமான்!... (மச்சாவதாரம்).

Image result for macha avatharam

அரசனான சத்ய விரதரை, அவரது பக்தியினாலும், பற்றற்ற தன்மையினாலும், 'முனிவர்' என்றே குறிப்பிடுகிறார் பட்டத்திரி.

குளத்திலும், பின்பு ஏரியிலும் விடப்பட்ட மீன், அதை அடைத்துக் கொண்டு, மிகப் பெரும் உருவம் தாங்கி வளர்ந்தது என்று பார்த்தோம். பின் அது சமுத்திரத்தில் சேர்க்கப்பட்டது. பட்டத்திரி, முனிவரான சத்யவிரதர், மீனாகத் தோன்றியது பகவானே என்றறிந்திருந்தபடியால், பகவானின் கட்டளைப்படியே, தம்முடைய யோக மகிமையினால் அந்த மீனை, கடலுக்குக் கொண்டு சென்றார்  என்று  சொல்கிறார்.