நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 13 டிசம்பர், 2017

KANNANAI NINAI MANAME!.. BAGAM IRANDU..PART 22...கண்ணனை நினை மனமே.. பகுதி 22..பக்தரின் பெருமை!!..(அம்பரீஷ சரிதம்).


துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர். ஞானமும் தவமும் பணிவுடன் கூடியிருந்தாலே வணங்கத்தக்கதாகும். உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர் அம்பரீஷனையே சரணடையும்'  என்று திருவாய் மலர்ந்தருளினார்.