நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 14 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 27..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.27. ஆத்ம ஜோதியில் புகுந்தார்!.

Related image
வானரர்களால் பல திக்குகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பாறைகளால் அணை கட்டி, ஸ்ரீராமர் இலங்கையை அடைந்தார்!. மரங்களும் குன்றுகளுமே ஆயுதங்களாகக் கொண்டு, வானரர்கள் போர் புரிந்தனர்!. ஸ்ரீ ராமர்  தம் இளையவருடன் சேர்ந்து போர்க்களத்தில் தமது பராக்கிரமத்தைக் காண்பிக்கும் பொழுது,  இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு, பின், கருடனின் சிறகுகளால் வீசப்பட்ட காற்றுப் பட்டு, விரைவில் விடுவிக்கப்பட்டார்!. பின் நடந்த போரில், சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்ட லக்ஷ்மணரின் சுவாசம் நின்று போக, பிறகு அவர், ஹனுமாரால் கொண்டு வரப்பட்ட ஔஷத மலையிலிருந்த சஞ்சீவினி மூலிகையால் பிராணனை அடைந்தார். மாயையின் பெருமையால் ஆணவம் கொண்டிருந்த இந்திரஜித்தை, லக்ஷ்மணர் முடித்தார். 

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU..PART 26..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.26. அன்னையைக் கண்டான்!..அக மகிழ்ந்தானே!!.

Related image

ஹனுமாரால் ஸ்ரீராமருக்கு, சுக்ரீவனுடன் தோழமை ஏற்பட்டது. துந்துபி என்ற அரக்கனின் மலை போன்ற எலும்புக் கூட்டை, தம் கால் கட்டை விரலால் உந்தி எறிந்தும், ஒரே பாணத்தால் ஏழு ஆச்சா மரங்களைத் துளைத்தும், ஸ்ரீராமர், சுக்ரீவனுக்கு தம் பலத்தின் மேலிருந்த ஐயத்தைப் போக்கினார். அவன் தமையனான வாலியை, மறைவாக இருந்து கொன்று விட்டு, சீதையின் பிரிவாற்றாமையால் வருத்தமுற்ற ஸ்ரீராமர், மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் மழைக் காலத்தைக் கழித்தார்.

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU... PART 25...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.25. !.ராவண மாயை!!!.

Image result for lord rama, surpanakha

பட்டத்திரி, சூர்ப்பனகையின் பிரவேசத்தைப் பற்றி அதிகம் விவரிக்கவில்லை.. புத்தி கெட்ட சூர்ப்பனகையின் வேண்டுகோள்களைப் பொறுக்க மாட்டாமல், அண்ணல் அவளை இளையவனிடம் அனுப்ப‌, பின் அவள் மூக்கறுபட்டதும், அவமானப்பட்ட சூர்ப்பனகையின் தூண்டுதலால் போருக்கு வந்த கர தூஷணர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரக்கர்களை ஸ்ரீராமர் முடித்ததும் பட்டத்திரியால் சொல்லப்படுகிறது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 24...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.24.. வனமேகினார் அண்ணல்!..!.

Related image

ஸ்ரீராம சீதா கல்யாண மஹோத்சவம் நிறைவடைந்ததும், அங்கிருந்து அயோத்திக்குப் புறப்பட்ட ஸ்ரீராமரை, பரசுராமர் வழிமறித்தார்.   பின், தம் பலத்தை ஸ்ரீராமரிடம் அர்ப்பணம் செய்து விட்டுச் சென்றார். ஸ்ரீராமர், சீதையுடனும், தன் தந்தை, சகோதரர்கள், பரிவாரங்களுடனும் அயோத்தியை அடைந்தார்!!!.. அழகே உருவெடுத்த ஸ்ரீராமர், அங்கு, தன் மனங்கவர்ந்த மனையாளுடன் இன்புற்று வாழ்ந்து வந்தார். ஒரு சமயம், பரதன், சத்ருக்னனுடன் தன் மாமன் இல்லத்திற்குச் சென்ற வேளையில், தசரதரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீராம பட்டாபிஷேகம், கேகய மன்னனின் புதல்வியால் தடுக்கப்பட்டு நின்று விட்டது!!!!!..

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU...PART 23..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.23.. ஸ்ரீராம ஜெய ராம!.

Image result for birth of God sri rama

பட்டத்திரி, புருஷோத்தமரான ஸ்ரீராமரின் திவ்ய சரிதத்தை, அடுத்ததாகச் சொல்லத் துவங்குகிறார். அகண்டு பரந்து விளங்கும் அன்பெனும் சாகரத்தை, எவ்விதம் இருபது பாடல்களுள் அடக்க இயலும்?!.. ஆனால், பகவானின் திருவருள், எதையும் சாதிக்கும் வல்லமையுடையது!.. வாமனனின் திருவுருவே திரிவிக்ரமனாகவும் வளர்ந்தது!.. அது போல், இரு தசகங்களில், பவ சாகரத்தைத் தாண்டுவிக்கும் எம்பெருமானின் அவதார மகிமை பட்டத்திரியால் சொல்லப்படுகிறது!..